தொகைச் சொல் என்பது என்ன?
தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல். அதாவது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் தொகைச்சொல் என்பதாகும். ஒரு/ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும். தொகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளோடு இங்கு காண்போம்.
ஒன்று
ஒருவன் - கடவுள் இருமை
(இரண்டு)
இருவினை - நல்வினை, தீவினை / தன்வினை, பிறர்வினை
இருதிணை - உயர்திணை, அஃறிணை / அகத்திணை, புறத்திணை
இருசுடர் - சூரியன், சந்திரன்
இருவகை அறம் - இல்லறம், துறவறம்
இருபலன் - நன்மை, தீமை மும்மை
(மூன்று)
முக்கனி - மா, பலா, வாழை
மூவேந்தர் - சேரன், சோழன், பாண்டியன்
முக்காலம் - நேற்று, இன்று, நாளை
முத்தொழில் - ஆக்கள், அழித்தல்,காத்தல்
நான்கு நால்வர் ,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்) / அறிவு,நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்)
நாற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு
ஐந்து
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை (பாலை - குறிஞ்சியும் முல்லையும் திரிந்து வெம்மையான நிலம்)
ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐம்பூதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வான்)
ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம், மனிகீகளை,சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு (தொட்டு), ஓசை, நாற்றம்
ஐம்பொன் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
ஐம்பெரும் பாதகம் - கொலை, களவு (கொள்ளை), கள், பொய், குருநிந்தை
பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்
ஆறு
ஆறு(அரு)சுவை - இனிப்பு,கசப்பு (கைப்பு), உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்)
ஏழு
ஏழு பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எழுபிறப்பு - தேவர், மனிதர் , விலங்கு, பறவை, ஊர்வன, பறப்பன, தாவரம்
எட்டு
எட்டுத்திக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு
ஒன்பது
நவதானியம் - நெல், கோதுமை, உளுந்து, கொள்ளு, எள், பயறு, கடலை, துவரை, அவரை
நவரசம் - நகை, அழுகை, இளிவரல் (இழிவு) , மருட்கை (வியப்பு/குழப்பம்), அச்சம், வெகுளி (கபடமற்ற), பெருமிதம் (யோகம்), உவகை (மகிழ்ச்சி), அமைதி (சாந்தம்)
நவரத்தினம் / நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்
பத்து
தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கல்கி
பத்தழகு - சுருங்கச் சொல்லல், விளங்கச் சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல்
No comments:
Post a Comment